(நா.தனுஜா)
அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழுவையும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவையும் இன்று 29 ஆம் திகதி சந்தித்த சஜித் பிரேமதாஸ தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க உயர்மட்டக்குழு கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்தது.
இந்தக்குழு 29 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர், பொருளியலாளர்கள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்ததுடன் அவற்றின்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
அதன்படி அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழுவிற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சி உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம், எரான் விக்ரமரத்ன ஆகியோரடங்கிய குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்காக இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்த எதிர்க்கட்சியினர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
அதேவேளை இலங்கையில் இருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்தும் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM