எரிபொருள் பற்றாக்குறையினால் ரயில் சேவை முழுமையாக பாதிப்படைய கூடும் : இன்று  26 ரயில் சேவைகள் இரத்து  

Published By: Digital Desk 4

29 Jun, 2022 | 06:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரயில்வே சேவையாளர்கள் சேவைக்கு சமுமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்க உரிய தரப்பினர் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும். பொது மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில் சேவை காணப்படுகின்ற நிலையில் பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.

ரயில் சேவைகள் நாளை முதல் அதிகரிப்பு - தூர பிரதேச ரயில் சேவைகள் ஆரம்பிக்காது  | Virakesari.lk

 அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மிக மோசமான தீவிரமடைந்துள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் நகரங்களுக்கிடையிலான ரயில், தூரசேவை பயணிகள் ரயில், அலுவலக ரயில் சேவை உள்ளிட்ட 26 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வாதுவை, பாணந்துறை, றம்புக்கனை, மீரிகம, வெயாங்கொட, அம்பேபுஸ்ஸ, நீர்கொழும்பு, மாதம்பே, மற்றும் அவிசாவெல்ல ஆகிய பகுதிகளுக்கான அலுவலக ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டன. அத்துடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் உதயதேவி ரயில் மற்றும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரயில் சேவையும் இவ்வாறு  இரத்து செய்யப்பட்டன.

அவிசாவெல்ல நோக்கி புறப்படும் பொதி விநியோக சேவை ரயில் இரத்து செய்யப்பட்டதால் மருதானை ரயில் நிலையத்தில் அவிசாவெல்ல ரயில் நிலையம் வரை விநியோகிக்கும் 300 பொதிகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொதிகள் விரைவாக விநியோகிக்க வேண்டியவை.

தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவையான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ரயில்சேவையாளர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள்.

ரயில் சேவையாளர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான சேவையாளர்கள் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் சேவைக்கு சமுகமளிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

பொது மக்கள் அதிகளவில் ரயில் சேவையினை பயன்படுத்தும் நிலையில் ரயில் சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்காவிடின் இனி வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்க கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31