(எம்.எப்.எம்.பஸீர்)
இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.
இது குறித்த எச்.சி.1948/20 எனும் வழக்கு நேற்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள, கலகொட அத்தே ஞானசார தேரர் இதன்போது மன்றில் ஆஜராகவில்லை.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் கூடிய போக்குவரத்து சிக்கல் காரணமாக, அவர் மன்றில் ஆஜராகதபோதும் பிடியாணை எதுவும் பிறப்பிக்கப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று குறித்த வழக்கில் சாட்சியம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பட்ட நிலையில், அவர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணி வசீமுல் அக்ரம் உள்ளிட்ட குழுவினருடன் மன்றில் ஆஜராகியிருந்தனர். இந் நிலையில் அவர்களுக்கு மீள சாட்சியளிக்க செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.
2016 ஆம் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், கொழும்பு - கிருளப்பனையில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தண்டனை சட்டக் கோவையின் 291( அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அவர் புரிந்ததாக சட்ட மா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க பலாங்கொடை ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது, கூரகல பெளத்த புராதன சின்னங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும், கேவலமான வசங்களைக் கொண்டு இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழி படும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாகவும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை மையப்படுத்தி, மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அது கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.
இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜரானார்.
இந்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் முயற்சிக்கும் நிலையில், அது குறித்து, குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர் ஆராய முறைப்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM