(என்.வீ.ஏ.)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகம் செரினா வில்லியம்ஸை சூழந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதன் காரணமாகே இந்த சந்தேகம் அவரை சூழ்ந்துள்ளது.
ஆனால், இந்தத் தோல்வி எதிர்கால மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளுக்கு உந்துதலாக இருப்பதாகவும் இன்னும் பல கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
23 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை சுவீகரித்துள்ள 40 வயதுடைய செரினா வில்லியம்ஸ் நேற்று நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர்முதலாம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானிடம் 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.
அப் போட்டியில் விடாமுயற்சியுடன் விளையாடிய 24 வயதான ஹார்மனி டான் 7 - 5, 1 - 6, 7 (10) - 6 (7) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று செரினா வில்லியம்ஸை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார்.
அகில இங்கிலாந்து கழகத்தில் இது அவரது கடைசி சந்தரப்பமாக இருக்கமா என செரினாவிடம் கேட்டபோது, 'இந்த கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியாது. எனக்குத் தெரியவில்லை. எனது பயணம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?' என பதிலளித்தார்.
'பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறுவேன். நிச்சயமாக இல்லை' என தொடர்ந்து பேசிய அவர் குறிப்பிட்டார்.
'என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துபார்த்தேன். நாளை இதனை விட என்னால் சிறப்பாக செய்யக்கூடியதாக இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்னர் இதனை விட சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால், இன்று என்னால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது. ஒரு கட்டத்தில் அதனையிட்டு திருப்தி அடைந்துதான் ஆகவேண்டும்' என செரினா மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM