மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளருடனான சந்திப்பில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு உறுதியளித்தது என்ன ?

Published By: Vishnu

29 Jun, 2022 | 05:24 PM
image

(நா.தனுஜா)

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருடன் சந்திப்பை நிகழ்த்தியிருக்கும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு, மீண்டும் பொருளாதார ஸ்திரதன்மையையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி சர்வதேசத்தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்குத் தாம் உதவத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளர்.

No description available.

 அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க உயர்மட்டக்குழு கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்தது.

No description available.

 இந்தக்குழு 29 ஆம் திகதி புதன்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர், பொருளியலாளர்கள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்ததுடன் அவற்றின்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

 இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்துடன் மிகநெருக்கமாகத் தொடர்புபட்டிருக்கக்கூடிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரை நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு, அவர்களுடன் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்த விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்தது.

 அதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசத்தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32