இஸ்ரேலிய இராணுவமானது படைவீரர்கள் தாக்குதலுக்கு முன்னர் கட்டிடங்களுக்குள் எவராவது உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த சுவர்களினூடாக உள்ளிருப்பதை கண்டறிவதற்கு வழிவகை செய்யும் செயற்கை மதிநுட்ப ஆற்றலைக் கொண்ட முறைமையொன்றைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரிய குழும நிறுவனமான எஸ்.கே. குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான கமெரோ டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட சேவர் 1000 ஆனது தடுப்புச் சுவர்களுக்குப் பின்புறமாகவுள்ளவற்றை கண்டறிவதற்கு உதவுகிறது. அவ்வாறு கண்டறியப்பட்டவை உபகரணமொன்றில் பொருத்தப்பட்ட திரையில் காட்சிப்படுத்தப்படும்.
மேற்படி சேவர் 1000 உபகரணத்தை பயன்பாட்டாளர்கள் சுவர்களில் நேரடியாக வைத்து அந்த சுவருக்குப் பின்னால் கட்டிடத்திற்குள் எவராவது அமர்ந்து நின்று அல்லது படுத்தவாறு உள்ளார்களா என்பதை திரையில் துல்லியமாக அவதானிக்க முடியும்.
அத்துடன் மேற்படி முறைமையானது கட்டிடத்திற்குள் இருப்பவர் வயது வந்தவரா அல்லது சிறுவரா என்பதைத் தீர்மானிக்க அளவீடுகளை காண்பிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது.
இந்த உபகரணத்தை தனிப்பட்ட பயன்பாட்டாளர் ஒருவர் செயற்படுத்த முடியும்.
சேவர் 1000 ஆனது இராணுவத்தினருக்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் மீட்புக் குழுவினருக்கும் உதவக் கூடியதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM