(நா.தனுஜா)
எதியோப்பியா தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராக இலங்கையைச்சேர்ந்த ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெட்ரிகோ விலெகஸ் (28) செவ்வாய்கிழமை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மேற்குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர்களாக கென்யாவைச்சேர்ந்த காரி பெற்றி முருங்கி மற்றும் அமெரிக்காவைச்சேர்ந்த ஸ்டீவென் ரற்னர் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் (2) நியமிக்கப்பட்ட நிலையிலேயே மூன்றாவதாக இலங்கையைச் சேர்ந்த ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றிய ஃபற்றோ பென்சூடா கடந்த (8) பதவி விலகியதையடுத்தே இந்த நியமனம் இடம்பெற்றிருக்கின்றது.
எதியோப்பியாவில் கடந்த 2020 நவம்பர் மாதத்திலிருந்து இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான மற்றும் அகதிகள் சட்டமீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடந்த 2021 டிசம்பர் 17 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டது.
ராதிகா குமாரசுவாமி மனித உரிமைகள் சட்டத்தரணி என்ற ரீதியில் பலவருடகால அனுபவத்தைக் கொண்டிருப்பதுடன், அவர் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM