(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போது சுகதார தரப்பினருக்காக பிரத்தியேகமாக நடைமுறையிலிருந்த பொதுப்போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தத்தமது தனிப்பட்ட வாகனங்களில் வைத்தியசாலைகள் மற்றும் தொழில்புரியும் இடங்களுக்கு வருதற்கு முடியாதுள்ளது.
இதனால் சுகாதார தரப்பினர் பலரும் சேவைக்கு சமுகமளிப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"எந்த தடையுமின்றி பொது மக்களுக்கான சுகாதார சேவையை வழங்குவதற்கான சுகாதார தரப்பினர் தயாராகவே உள்ளோம்.
மேலும், மக்களுக்கு சேவை வழங்குவதற்காக வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் பலரும் பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் சைக்கிள்களிலும்கூட வைத்தியசாலைகளுக்கு வருகை தருகின்றனர்.
மேலும், கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போது சுகதார தரப்பினருக்காக பிரத்தியேமாக நடைமுறையிலிருந்த பொதுப்போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
இதேவேளை, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ரயில்வே திணைக்கள உத்தியோகபூர்வ இல்லங்கங்களிலிருந்து ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு ரயில் ஓட்டுநர்கள், அதிகாரிகள் , ஊழியர்களும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுவருவதாக ரயில்வே திணைக்கள தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM