பிரத்தியேகமான பொதுப்போக்குவரத்து சேவையை சுகதார தரப்பினருக்கு மீண்டும் ஆரம்பிக்கவும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

Published By: Vishnu

27 Jun, 2022 | 04:01 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போது  சுகதார  தரப்பினருக்காக  பிரத்தியேகமாக  நடைமுறையிலிருந்த பொதுப்போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை  விடுத்துள்ளது. 

 தற்போது நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தத்தமது தனிப்பட்ட வாகனங்களில் வைத்தியசாலைகள் மற்றும் தொழில்புரியும் இடங்களுக்கு வருதற்கு முடியாதுள்ளது.

இதனால் சுகாதார தரப்பினர் பலரும் சேவைக்கு சமுகமளிப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"எந்த தடையுமின்றி பொது மக்களுக்கான சுகாதார சேவையை வழங்குவதற்கான சுகாதார தரப்பினர் தயாராகவே உள்ளோம். 

மேலும், மக்களுக்கு சேவை வழங்குவதற்காக வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் பலரும் பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் சைக்கிள்களிலும்கூட வைத்தியசாலைகளுக்கு வருகை தருகின்றனர். 

 மேலும், கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போது  சுகதார  தரப்பினருக்காக பிரத்தியேமாக நடைமுறையிலிருந்த பொதுப்போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

இதேவே‍ளை, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ரயில்வே திணைக்கள உத்தியோகபூர்வ இல்லங்கங்களிலிருந்து ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு ரயில் ஓட்டுநர்கள், அதிகாரிகள் , ஊழியர்களும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுவருவதாக ரயில்வே திணைக்கள தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08