கோப் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழு

Published By: Ponmalar

01 Nov, 2016 | 06:37 PM
image

( ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடிகள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை நடத்தக்கோரி  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு வலியுறுத்தியுள்ளதுடன், நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில்  விசேட குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது . தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். 

குறிப்பாக  கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்தே மத்திய வங்கி விவகாரம் பெரியதொரு சர்ச்சையாக பாராளுமன்றத்திலும்இ மக்கள் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் இது வரையில் அதற்கான எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதமை  குறித்து நாம்   ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். மக்கள் மத்தியில் இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. ஆகவே ஜனதிபதி என்ற வகையில் இந்த விடயத்தில் இஸ்திரமான நிலைப்பாட்டை எட்டவேண்டும். அதேபோல் மத்திய வங்கி விவகாரத்தில் கோப்குழு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமிக்குமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. 

அந்த வகையில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஜனவரி மாதத்திற்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39