(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஜா-எல, ஏக்கல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாயின் கையிலிருந்த துப்பாக்கியை அபகரிக்க முற்பட்ட நபர் உள்ளிட்ட மூன்று பேரை ஜா-எல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதியன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது சந்தேகநபர்களில் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எம். ஜி. டி. ரத்நாயக்கவின் தலைமையில் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் திஸாநாயக்க, பொலிஸ் சார்ஜன்ட் (35599) வன்னிநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (24346) சில்வா ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM