தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுக்கு நிதி கோரப்படுகின்றதா? - உடனடியாக அறிவிக்குமாறு  இ. தொ. கா. வேண்டுகோள்

Published By: Digital Desk 4

23 Jun, 2022 | 11:52 PM
image

-  (எம்.வை.எம்.சியாம்)

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய தமிழக அரசினால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அவை அரசாங்கத்தால் இலவசமாக  விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த நிவாரணப் பொருட்களுக்கு நிதி சேகரிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக தெரியப்படுத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Articles Tagged Under: செந்தில் தொண்டான் | Virakesari.lk

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதை அவர் தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய தமிழக அரசின் 9,000 மெட்றிக் தொன் நிவாரண உலர் உணவுப் பொருட்கள் நாடாளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினமும் 15,000 மெட்றிக் தொன் அரிசி அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் ஏற்றிய மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்கு அரசாங் கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹப்புதளை, கொட்டலாகல பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிப்பதற்கு கட்டணம் அறவிடப்படுகின்றது என்றும்  பால்மா விநியோகிப்பதற்காக ரூபா 50 கட்டணம் அறவிட படுவதற்கு குறித்த ஒரு தரப்பினர் முயற்ச்சித்து உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கபெற்று இருக்கின்றன. 

இது தொடர்பாக ஹப்புதளை பிரதேச செயலகம் ஊடாகவும் அதற்கான பொறுப்பதிகாரிகள் மூலம் ஆராயப்படும்.மேலும் அரசாங்கத்தினால் நிவாரண பொருட்கள் விநியோகிப்பதற்கு கட்டணங்கள் எதுவும் அறவிடப்படவில்லை.

அவ்வாறான தீர்மானங்களும் எட்டப்படவில்லை. குறித்த முறைப்பாடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி மற்றும் வேறு கட்டணங்கள் சேகரிக்கும் தரப்பினரை உடனடியாக தெரியப்படுத்துமாறு அவர் குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56