(நா.தனுஜா)
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் சர்வதேச கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து குழுவொன்றை உருவாக்கியிருப்பதுடன், தமது சார்பில் 'வைற் அன்ட் கேஸ்' என்ற பிரபல சட்ட ஆலோசனை நிறுவனத்தை நியமித்துள்ளனர்.
தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகவும், கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் பிணைமுறிதாரர்களைப் (பிணைமுறி உரிமையாளர்கள்) பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தரப்பினர் இந்தக் குழுவில் அங்கம்வகிப்பதாக வைற் அன்ட் கேஸ் சட்ட ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசாங்க அதிகாரிகளுடனும் ஏனைய கடன் வழங்குனர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள மேற்படி குழுவிலுள்ள கடன்வழங்குனர்கள், அர்த்தமுள்ள மறுசீரமைப்புக்கள் மற்றும் நிதித்திருத்தங்கள் தொடர்பான திட்டமொன்றை இலங்கை செயற்படுத்தவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM