அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் - ஜே.வி.பி. அறிவிப்பு

Published By: Vishnu

22 Jun, 2022 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

அதற்கமைய அடுத்த வாரம் முதல் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி.) அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் 22 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது.

மக்களைப் பற்றி எவ்வித கவலையும் அற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மீண்டும் அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்.

எனவே மக்களின் ஆர்ப்பாட்டங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து , அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

அதற்கமை எதிர்வரும் 26 ஆம் திகதி அநுராதபுரத்திலும் , 27 ஆம் திகதி குருணாகலிலும் , 28 ஆம் திகதி மாத்தறையிலும் , 29 ஆம் திகதி களுத்துறையிலும் ஜூலை முதலாம் திகதி அம்பலாந்தோட்டையிலும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இதே போன்று ஏனைய நகரங்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராவதினாலேயோ அல்லது அமைச்சராவதினாலேயோ எவ்வித பயனும் இல்லை. அவரும் ஏனைய மோசடிக்கார குழுவில் சேர்ந்த ஒருவரே.

இவ்வாரம் முழுவதும் பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்து , எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று சபையில் கேள்வியெழுப்புவோம். அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19