பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் திருமண நிகழ்வு ஒன்றுக்கு இந்தியா செல்லவுள்ளதாகவும் மேலும் ஜப்பான் நாட்டில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் உதய கம்மன்பில தனது சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றதில் கோரிக்கை விடுத்துள்ளார்..
உதய கம்மன்பிலவின் கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 9 ஆம் திகதி பதிலளிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட உதய கம்மன்பிலவின், கடவுச் சீட்டை கடுவலை நீதவான் நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM