தம்பபண்ணி கடற்படை முகாமில் கடமையாற்றும் புலனாய்வுப் பிரிவினர் இருவர் கேரள கஞ்சாப் பொதிகளை கொண்டு செல்ல முற்பட்டவேளை பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பபண்ணி கடற்படைக்குச் சொந்தமான இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாப் பொதிகளை விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லப்படடுவதாக புத்தளம் பிராந்திய போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குருனாகல் வீதியின் கள்குளம் பகுதியில் வைத்து குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 650 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சாவைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட தம்பபண்ணி கடற்படைக்குச் சொந்தமான இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், கேரள கஞ்சாப் பொதிகளையும், கஞ்சாவைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கடற்படைக்குச் சொந்தமான இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் மற்றும் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM