(எம்.மனோசித்ரா)
இலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சீனா, இவ்வாரம் முதல் இலங்கைக்கு 3 விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் கியூ சென்ஹொங் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள் , எதிர்காலத்தில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான நிவாணரங்கள் தொடர்பில் தூதுவர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.
சீனாவில் கல்வி பயிலும் இலங்கையின் மருத்துவத்துறை மாணவர்கள் மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுத்தல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துதல் குறித்து இதன் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி அனுப்பி வைத்த வாழ்த்து செய்தியும் இந்த சந்திப்பின் போது தூதுவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் நட்பு நாடாக சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM