தென்னிலங்கையிலானால் நிலைமை மோசமாகியிருக்கும் : யாழ்.மக்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி

Published By: Robert

01 Nov, 2016 | 08:31 AM
image

யாழ்.­பல்­க­லைக்­க­ழக மாண­வர்களின் படு­கொலை சம்­ப­வத்­தின்­போது அமை­தி­காத்­த­மைக்கு யாழ்.மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றேன். தென்­னி­லங்­கையில் இத்­த­கைய சம்­பவம் நடை­பெற்­றி­ருந்தால் இதை­விட மோச­மான அமை­தி­யற்ற தன்மை ஏற்­பட்­டி­ருக்கும்   என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன  தெரி­வித்தார்.

மாண­வர்­களின் மனங்­களில் ஏற்­பட்ட வேத­னை­களை நாமும் அறிவோம். இதனால் சில ஆர்ப்­பாட்­டங் கள், போராட்­டங்கள் இடம்­பெற்­றன.  அப்­ப­டி­யான ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் நியா­ய­மா­னவைதான் 

என்­பதை ஏற்றுக்கொள்­கின்றேன். மேலும் கையெ­ழுத் 

துப் போடு­கின்ற ஒப்­ப­ந்­தத்­தை­விட உள்­ளத்தில் மனச்­சாட்­சியில் இருக்­கின்ற  உடன்­ப­டிக்­கைதான் முக்­கி­ய­மா­னது என்­பதை இந்தவிடயத்தில் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்  என்றும்  ஜனா­தி­பதி  சுட்­டிக்­காட்­டினார்.  

இரா­ணுவத்­தி­ன­ரிடம் இருந்த 450 ஏக்கர் காணியை மக்­க­ளுக்கு பகிர்ந்துகொடுப்­ப­தற்­கான அனு­ம­தியை அர­சாங்க அதி­ப­ரிடம் கைய­ளித்­துள்ளேன். கடந்த ஒரு வரு­ட­மாக இதே­போன்று மக்­க­ளுக்­கான

 காணி­களை விடு­வித்­துள்ளோம். அதே­போன்று மேலும் காணி­களை மக்­க­ளிடம் விரை­வாக ஒப்­ப­டைப்போம் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.  

யாழ்ப்­பா­ணத்­துக்கு நேற்று விஜயம் செய்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  கீரி­மலை பகு­தியில் புதி­தாக அமைக்­கப்­பட்ட 100 வீட்டு திட்­டத்தை மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

ஜனா­தி­பதி அங்கு மேலும் உரை­யாற்­று­கையில் 

புதிய  அர­சி­ய­மைப்பு வரை­புத்­திட்டம் வெளி­வ­ரு­வ­தற்கு முன்­னரே   சிலர் தவ­றாக செயற்­ப­டு­கின்­றார்கள். பலர் விகா­ரை­க­ளுக்குச் சென்று பெ ளத்த மத குரு­மார்­க­ளுக்கு தவ­றான விட­யங்­களை  செய்து வரு­கின்­றார்கள். குறிப்­பாக பௌத்த மதத்­திற்கு தற்­போ­துள்ள முக்­கி­யத்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இல்லை என்று கூறி­வ­ரு­கின்­றார்கள். மேலும் நாம் நாட்டைக் காட்டிக் கொடுக்­கப்­போ­கின்றோம் எனவும் நாட்டைப் பிளவுப் படுத்தப் போகின்றோம் எனவும் கூறு­கின்­றனர்.   படை­யினர்   யுத்தம் செய்து கட்­டிக்­காத்த இந்த நாட்டை பிரிக்­கப்­போ­கின்றோம் என குற்றம் சாட்­டு­கின்­றார்கள். இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் முழு­வ­தையும் நான் நிரா­க­ரிக்­கின்றேன். 

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­டும்­போது எங்­களால் செய்­யப்­ப­ட­வேண்­டிய கட­மைகள் பொறுப்­புகள் என்ன என்­பது எங்­க­ளுக்கு நன்­றாக தெரியும். சிலர் வேறு நாடு­களில் உள்ள அர­சி­ய­ல­மைப்பைப் பற்றி பேசு­கின்­றார்கள். வேறு­நா­டு­களின் அர­சியல் அமைப்பு எங்­க­ளுக்குப் பொருந்­தாது. எங்­க­ளுக்கு பொருந்­தக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்­பைத்தான் உரு­வாக்­க­வேண்டும். எல்­லோ­ரு­டைய ஆத­ர­வையும் பெறக்­கூ­டிய விதத்தில் உரு­வாக்க வேண்டும். அந்த சவாலை நாங்கள் எதிர்­கொள்­ள­வேண்டும். எமது தேசத்தில் மீண்டும் இரத்த ஆறு ஓட அனு­ம­திக்­கக்­கூ­டாது. 

எனவே நாட்டில் வாழு­கின்ற படித்த புத்­தி­மான்கள் கல்­வி­மான்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். இந்த நாடு அனைத்து மக்­களும் வாழு­கின்ற தேச­மாகும். அது மொழியால் இனத்தால் பிரி­யக்­கூ­டாது. நாம­னை­வரும் ஒன்று சேர்ந்து அந்­தக்­க­ட­மையை நிறை­வேற்­றுவோம். 

 வட பகுதி மக்­களை பொறுத்­த­வரை   முக்­கிய விட­ய­மாக நாங்கள் அனை­வரும் பொறுப்­பாக செயற்­பட வேண்டும் எனவும் சில பிரச்­சி­னைகள் அவ­ச­ர­மாக தீர்வு கிடைக்­க­வேண்டும் என நினைக்­கின்­றார்கள். இவ்­வாறு நினைப்­பது சமு­கத்தில் வாழ்­கின்ற எல்லா மக்­க­ளு­டை­யதும்  சுபாவம். ஆனால் இருக்­கக்­கூ­டிய பிரச்­சி­னைகள் பற்றி தெ ளிவாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எங்­களை  அமை­தி­யற்ற நிலையில் பார்ப்­ப­தற்கு   சிலர் காத்­துக்­கொண்டு இருக்­கின்­றார்கள். இத்­த­கைய கப­ளி­க­ர­மான செயற்­பாட்­டுக்கு நாங்கள் இட­ம­ளிக்­கக்­கக்­கூ­டாது. நாங்கள் பெற்­றுக்­கொண்ட சமா­தா­னத்தை இழந்து போகக்­கூ­டாது. வட­ப­குதி மக்கள் மிகவும் பொறு­மை­யோடும் செய­லாற்­று­கின்­றார்கள் என்­பது எமக்குத் தெரியும்.  இந்தப் பொறு­மையும் அமை­தி­யும்தான் எமக்கு முக்­கி­ய­மாகும். நீங்கள் அமை­தி­யாக செயற்­ப­டு­வ­தற்கு நான் நன்­றியைத் தெரி­வுத்­துக்­கொள்­கின்றேன். 

 கடந்த கால வர­லாற்றை நாம் அறிவோம்.  அது கடு­மை­யான இருள் சூழ்ந்த காலம்.  அந்த யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. எனவே சமா­தா­னத்தை மீள உரு­வாக்­கு­வ­தற்­காக பணி­பு­ரிந்த முப்­ப­டையைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் நன்­றி­களைக் கூரு­கின்றோம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்­ப­டா­ம­லி­ருக்க செயற்­ப­ட­வேண்­டி­ய­துதான் எங்கள் அனை­வ­ரி­னதும் கட­மையும் பொறுப்­பு­மாகும்.

யுத்தம்  நடை­பெற்ற காலத்தில்  பாது­காப்புப் படை­யி­னரும் அதற்­கெ­தி­ரா­ன­வர்­களும் கைளில் ஆயு­தங்­களைக் கொண்­டுதான் யுத்தம் செய்­தார்கள். 

இன்று அந்த முப்­ப­டை­யினர் நல்­லி­ணக்­கத்­திற்­காக தமது கைகளை நீட்­டு­கின்­றார்கள். சாதா­ரண பொது­மக்­க­ளுடன் சிநேக பூர்­வாக முப்­ப­டை­யி­னரும் பணி­யாற்­றி­வ­ரு­கின்­றார்கள். இதுதான் முப்­ப­டை­யி­ன­ரு­டைய பொறுப்பும் கட­மை­யு­மாக இருக்­கின்­றது. இவற்­றைத்தான் முப்­ப­டை­யி­னரும் நிறை­வேற்றி வரு­கின்­றார்கள் என எனக்குத் தெரி­கின்­றது. 

இதன் கார­ண­மா­கதான் இரா­ணு­வத்­தி­னரை  இணைத்து நல்­லி­ணக்க புரம் என்ற வீட்­டுத்­திட்­டத்தை மக்­க­ளுக்கு கைய­ளிக்­கின்றோம். இதனை  ஒரு நல்ல திட்­ட­மா­கவே கரு­து­கின்றேன். இங்கு 100 வீடுகள் கட்டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­காக இரா­ணு­வத்தில் உள்ள பொறி­யி­ய­லாளர் பிரி­விற்கு எனது விசேட நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.இந்த வீட்டின் காணி­யுடன் சேர்ந்த வீட்டின் பெறு­மதி 28 இலட்சம் ரூபா­வாகும்.   அழ­கா­கவும் முறை­யா­கவும் இவை கட்­டப்­பட்­டுள்­ளன. 

 இரா­ணுத்­தி­ன­ரிடம் இருந்த 450 ஏக்கர் காணியை மக்­க­ளுக்கு பகிர்ந்து கொடுப்­ப­தற்­கான  அனு­ம­தியை அர­சாங்க அதி­ப­ரிடம் இன்று கைய­ளித்­துள்ளேன். கடந்த ஒரு வரு­ட­மாக இதே­போன்று மக்­க­ளுக்­கான காணி­களை விடு­வித்­துள்ளோம். அதே­போன்று மேலும் காணி­களை மக்­க­ளிடம் விரை­வாக ஒப்­ப­டைப்போம். 

யாழ்.மாவட்டம் உட்­பட  குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் ஒரு இலட்­சத்­திற்கு மேற்­பட்ட வீடு­களைக் கட்­டு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். இந்த வீட்­டுத்­திட்­டங்­களை முப்­ப­டை­யினர் மூல­மா­கவும் கம்­ப­னிகள் மூல­மா­க­வும அமைப்­ப­தற்கு செய­லாற்றி வரு­கின்றோம். அந்த வேலைத்­திட்­டங்கள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதில் ஒரு அம்­ச­மா­கவே   இந்த வீட்­டுத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அர­சாங்கம் என்ற ரீதியில் நாங்கள் வேக­மாக இத்­த­கைய வேலைத்­திட்­டங்­களை செய்து முடிப்போம். 

இது மட்­டு­மன்றி வட­மா­கா­ணத்தில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதி­யான முன்­னேற்­றத்தை செய்து கொடுப்­ப­தற்கும் பல திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

நாங்கள் வெற்றி கொள்ள வேண்­டிய இரண்டு விட­யங்கள் உள்­ளன. முத­லா­வ­தாக இனங்­க­ளுக்கு  மத்­தியில் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் .வெற்றி கொள்ள வேண்டும். மற்­றை­யது மக்­க­ளு­டைய வறு­மையைப் போக்க பொரு­ளா­தார ரீதி­யான முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். இதற்­காக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் பல திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்த வறுமை, ஏழ்­மையை  இல்­லா­ம­லாக்கும்  செயற்­பாட்டை   இந்தப் பகு­தியில் மாத்­தி­ர­மல்ல நாட்டில் உள்ள எல்லா மாகா­ணங்­க­ளிலும் செயற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. 

நாங்கள் புதிய அர­சாங்கம் என்ற வகையில் எங்­க­ளுக்கு கடன்­களும் பல உத­வி­களும் வெ ளிநா­டு­க­ளி­லி­ருந்து ஏரா­ள­மாக கிடைத்து வரு­கின்­றன. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் வறு­மையை    ஒழிப்­ப­தற்கும் வெளி­நா­டுகள் பல உத­வி­களை  செய்து வரு­கின்­றன. இதன்­கா­ர­ண­மாக 2017 ஆண்டை வறு­மை­யி­லி­ருந்து விடு­ப­டு­கின்ற ஆண்­டாக பிர­க­ட­ணப்­ப­டுத்தி இருக்­கின்றோம்.  நல்­லி­ணக்­கத்­திற்­கான செயற்­பாட்டை கடந்த வரு­டத்­தி­லி­ருந்து மேற்­கொண்­டி­ருக்­கின்றோம். இதற்­காக நீங்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வீர்கள் என்று நம்­பு­கின்றேன். இத்­த­கைய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற போது இடை­யி­டையே சில தடைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 

யாழ். மக்­க­ளுக்கு நன்றி  

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் அண்­மையில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.. இந்தச் செய்தி எனது காதுக்கு எட்­டி­ய­துடன் பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை நடாத்­து­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கும் அவர்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் உத்­த­ர­விட்­டுள்ளேன். அதற்­காக விசேட குழு­வொன்­றினை கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் அனுப்­பி­வைத்­தி­ருந்தேன். இச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இச் சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னர் யாழ்ப்­பா­ணத்தில் நிச்­ச­ய­மற்ற தன்மை ஏற்­பட்­டுள்­ளது.. யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் சகோ­தர மாண­வர்கள் அதிர்ச்­சி­யுடன் காணப்­பட்­டார்கள். யாழ்ப்­பாண மக்­களும் கலக்­க­ம­டைந்­தார்கள். அவர்­களின் மனங்­களில் ஏற்­பட்ட வேத­னை­களை நாமும் அறிவோம். இதனால் சில ஆர்ப்­பாட்­டங்கள் போராட்­டங்கள் ஏற்­பட்­டன. அப்­ப­டி­யான ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் நியா­ய­மா­ன­துதான் என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன். யாழ்ப்­பா­ணத்தில் அமை­தி­யான நிலையே காணப்­பட்­டது.  ஆனால் கொழும்பில் இவ்­வாறு ஏற்­பட்­டி­ருந்தால் இதை­விட மோச­மான அமை­தி­யற்ற நிலை ஏற்­பட்­டி­ருக்கும். இத்­த­கயை செயற்­பா­டுகள் நடை­பெறும் போது மாண­வர்கள் கல­வ­ர­ம­டைந்­தி­ருப்­பது புது­மை­யன காரி­ய­மல்ல. 

மோச­மாக இருந்­தி­ருக்கும்

எமது நாட்டு மக்கள் ஜன­நா­யக ரீதியில் தங்­க­ளு­டைய  உரி­மை­களை மிகச் சரி­யாக எடுத்­துக்­காட்­டு­கின்­றார்கள். எனவே இச்­சம்­பவம் தொடர்­பாக அமை­தி­யாக செயற்­பட்ட யாழ்ப்­பாண மக்­க­ளுக்கு நான் நன்­றியைக் கூறிக்­கொள்­கின்றேன். ஆனால் தென்­னி­லங்­கையில் இத்­த­கைய சம்­பவம் நடை­பெற்­றி­ருந்தால் இதை­விட மோச­மான அமை­தி­ய­மற்ற தன்மை ஏற்­பட்­டி­ருக்கும். இவ்­வா­றான  மோச­மான சம்­ப­வங்கள் ஏற்­ப­டாத விதத்­தி­லி­ருப்­ப­தற்கு அனைத்து பிரி­வி­னரும் செயற்­ப­ட­வேண்டும். 

ஊட­கங்­களின் பொறுப்பு  

இவ்­வா­றான சம்­வங்கள் இடம்­பெ­றும்­போது ஊட­கங்கள் மிகக் கவ­ன­மாக செயற்­பட வேண்டும். சில ஊட­கங்கள் தங்கள் செய்­திகள் ஊடாக மக்­களை அமை­தி­யாக இருக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டன. . ஆனால்   சில ஊட­கங்கள் மக்­களை குழப்பும் விதத்­திலும் அமை­தி­ய­மற்ற தன்­மையை ஏற்­ப­டுத்தும் வித­மா­கவும் செயற்­பட்­டுள்­ளன. எனவே எல்லா வித­மான உரி­மையும் சுதந்­தி­ரமும் உள்­ளது என்­ப­தற்­காக இப்­ப­டி­யான சம்­பவம் இடம்­பெ­றும்­போது நாட்டில்  அமை­தியும் சம­தா­னமும் ஏற்­படும் விதத்தில் ஊட­கங்கள் செயற்­ப­ட­வேண்டும். 

தொலைக்­காட்­சியைப் பார்த்­தாலும் பத்­தி­ரி­கை­களைப் பார்த்­தாலும் அவை  மக்­களின் மனங்­களை அமை­தி­ய­டையச் செய்­வ­தாக இருக்­க­வேண்டும். இதை விடுத்து மக்­களை குழப்பம் விளை­விக்கச் செய்­வது தவ­றான விட­ய­மாகும். ஊட­கங்கள் எப்­போதும் சமு­கத்தில் அமை­தி­யையும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­ப­ட­வேண்டும்.

மக்­க­ளுக்கு பொறுப்புத் தன்­மையை ஏற்­ப­டுத்­த­வேண்டும். ஊட­கங்கள் தங்­க­ளு­டைய பொறுப்­புக்­களை சரி­யாக செய்­யா­விட்டால் ஒரு நாட்டை நிர்­மூ­ல­மாக்­கி­விட முடியும். எனவே  அவ்­வா­றான செயலைச் செய்யும் போது அவர்கள்  அர­சியல் ரீதியில் செயற்­ப­டக்­கூ­டாது. எனவே நாங்கள் எப்­போதும் பொறு­மை­யோடும் கட­மை­யு­ணர்­வோடும் செயற்­ப­ட­வேண்டும். கட­மை­யாற்றும் போது நாட்டு நன்­மைக்­காக மக்­க­ளுக்கு தீமை ஏற்­ப­டாத வகையில் ஒன்று பட்டு செயற்­ப­ட­வேண்டும். எனவே மக்­களை அமை­தி­யாக இருக்­கக்­கூ­டிய விதத்தில் செயற்­பட்ட ஊட­கங்­க­ளுக்கு நான் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். 

இவை­எல்லா வற்­றையும் வைத்­துக்­கொண்டு நாங்கள் நல்ல நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப உறு­தி­பூ­ண­வேண்டும். 

நாங்கள் நாட்டில் தேசிய நல்­லிக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கி வரு­வது யாவ­ருக்கும் தெரியும். வட­ப­குதி மக்கள் என்னைத் தெரிவு செய்­வ­தற்­காக அவர்கள் அளித்த உத­வியை நான் மறக்க மாட்டேன். கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை­சே­னா­தி­ராஜா உரை­யாற்றும் போது தமிழ் மக்கள் எந்த வித­மான உடன்­ப­டிக்­கையும் இல்­லாமல் உங்­க­ளுக்கு  வாக்­க­ளித்­தார்கள் என்று சொன்னார். எனவே கையெ­ழுத்துப் போடுகின்ற ஒப்பதந்தத்தைவிட உள்ளத்தில் மனச்சாட்சியில் இருக்கின்ற அந்த உடன்படிக்கைதான் முக்கியமானது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் மனச்சாட்சியின் ஊடாக   நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக நாமனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும். எமது நாட்டில் ஒற்றுமையீனத்தை இல்லாமல் செய்வதற்கு செய்யப்பட்ட காரணங்கள் இந்த நாட்டில்  பல தசாப்தங்களாக இருந்துள்ளன. அது இறுதியில் யுத்தமாக உருவானது. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றது. யுத்தத்தின் கொடுமைகளை நாங்கள் எல்லோரும் அனுபவித்துள்ளோம். மீண்டும் யுத்தம் ஏற்படாமலிருக்க வேண்டுமாயின் நாங்கள் எல்லோரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது தான் உருவாகியுள்ளது. 

இதைப்பற்றி பலர் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்கின்றார்கள். கேலியாக பேசுகிறார்கள். இத்தகைய செயற்பாட்டுக்காக பொருத்தமற்ற வகையில் செயற்படுகின்றார்கள். ஆனால் இது   குறைவாக மதிப்பீடு செய்யக்கூடிய விடயமல்ல. கடந்த 50,60 வருட காலமாக இதைப்பற்றிய அனுபவங்கள் எம்மிடம் உள்ளன. நாடு என்ற ரீதியில் நல்ல தீர்மானத்தை எடுப்பதற்கு நல்ல சந்தர்ப்பமாக தற்போதைய சூழலுள்ளது. நாங்கள் அரசியமைப்பு மூலமாக எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பைத்தான் உருவாக்கப்போகின்றோம்.  தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பை  உருவாக்கி வருகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09