(எம்.எப்.எம் பஸீர்)
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுவத்த மாபொலை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் ஐந்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைவாக வத்தளை பொலிஸார் இருமாடிகளை கொண்ட வீடொன்றை சோதனை செய்த போது இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் 59 வயதான அவ்வீட்டில் வசித்த நபரை கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடாக பேச்சாளர் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வெளிநாட்டு தயாரிப்பான இரட்டை குழல் தோட்டா துப்பாக்கிகள் இரண்டு, ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்று, பொய்ன்ட் 22 ரக துப்பாக்கிகள் இரண்டு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுக்கும் நிலையில் வெலிசறை நீதிமன்றில் அவரை ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM