(ந.ஜெகதீஸ்)
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் நாளை முதல் 3 க்யூப்க்கு மேல் மணல் ஏற்றிசெல்லும் கனரக வாகனங்களுக்கான விசேட போக்குவரத்து நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனடிப்படையில் குறித்த லொறிகளை மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணிவரையிலான காலப்பகுதியிலேயே பிரதான நகரங்களில் செழுத்த முடியும் என மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவிதத்துள்ளது.
இதேவேளை ஜனவரி மாதம் முதல் ஜீ பி எஸ் கருவிகளை பொருத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் இதனால் பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர்கமகே தெரிவித்தார்
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய சூழலில் அதிகளவான வாகன நடமாட்டம் காரணமாக பிரதான நகரங்களில் கடும் போக்கு வரத்து நெரிசலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 கிலோமீட்டர் தூரத்தை பயணிப்பதாக இருந்தால்கூட 5 மணியாத்தியாலத்திற்கு மேலான கால அளவு எடுக்கின்றது. இதனால் காலை வேளைகளில் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்வோரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் சுற்றாடல் அமைச்சு புவிசரிதவியல் திணைக்களம் பொலிஸ் போக்குவரத்து திணைக்களம் இணைந்து பொது போக்கு வரத்து தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டது. சேகரிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தரவுகளின் அடிப்படையில் பிரதான நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களில் அதிகளவான கனரக வாகனங்கள் பயணிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேல் மத்திய ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனான பல சுற்று பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM