மன்னார் - நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : சரணடைந்த 5 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் 

Published By: Digital Desk 4

19 Jun, 2022 | 11:46 AM
image

மன்னார்  நொச்சிக்குளம்  கிராமத்தில்  கடந்த 10  ஆம் திகதி வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர்கள் இருவர்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் நேற்றைய தினம் சனிக்கிழமை (18) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை (24) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதிபதி நேற்று (18) உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன்  இருவர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த  சம்பவத்தை அடுத்து  கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் கொலையுண்ட சகோதரர்கள் இருவரின் சடலங்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு  பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டது.

அத்துடன் மேற்படி சம்பவத்தில்  படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த   கொலை  தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர்கள்  தொடர்பில்  தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர்கள் 5 பேர் நேற்று முன்தினம் (17) இரவு சட்டத்தரணிகள் ஊடாக  மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இதன்போது சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர்ளையும்  மன்னார் பொலிஸார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில், நேற்று சனிக்கிழமை(18) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58