நிலவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனா நிலவுக்கு அனுப்பிய சேஞ்ச் 5 என்ற ஆளில்லா விண்கலம், நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறைத்துகள்களை பூமிக்கு எடுத்து வந்திருந்தது.
இந்த கல்பாறை துகள்களை விஞ்ஞானிகள் பரிசோதித்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சியின் முடிவு அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே நிலவில் தண்ணீர் இருந்தது என்பதை உறுதிசெய்யும் விதமாக நிலவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.
இதன் மூலம் நிலவில் தண்ணீர் எந்த வடிவத்தில் எவ்வளவு இருக்கிறது என்பது போன்ற அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் எளிதாக்கப்பட உள்ளன.
அதே வேளையில் நிலவில் பரந்த அளவில் நீர்த்தேக்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலவின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் மூலக்கூறுவை பிரித்தெடுக்க தேவையான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தவும் இந்த கண்டுபிடிப்பு உதவ இருக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் போது, அவர்களுக்கு தேவையான ஒக்சிசனை உறுதிசெய்ய இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும் உதவும் என்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM