(எம்.எம்.சில்வெஸ்டர்)
எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைப் பணியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்தார்.
கறுப்புச் சந்தையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மோசடிகாரர்கள் எரிபொருட்களை பதுக்கி வைப்பதால் இந்த மோசமான நிலை உருவாகியுள்ளதுடன், அவ்வாறனவர்களுக்கு எதிராக பொலிஸாரும் இராணுவத்தினரும் மௌனம் சாதிப்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"எரிபொருள் மாஃபியா இன்று நல்ல வருமான ஆதாரமாக மாறியுள்ளது. எரிபொருள் சேகரிக்கும் மோசடிக்காரர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை 650 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 550 ரூபாவுக்கும் விற்கின்றனர். அத்தியவசிய சேவையான சுகாதார சேவைப் பிரிவினருக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த மோசடிக்காரர்களால் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ளது" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM