ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது - மத்திய வங்கியின் ஆளுநர்

Published By: Digital Desk 5

17 Jun, 2022 | 04:21 PM
image

(நா.தனுஜா)

இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என்றும், உரிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாதது தவறு என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிக்கு அரசியல் செல்வாக்கு இல்லை! வட்டி விகிதங்களை உயர்த்த திட்டம்  :புதிய ஆளுநர் - | lanka4.com | லங்கா4.கொம்

இவ்வருடம் எமது நாடு சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தால், கடன்களை மீளச்செலுத்தும் நடவடிக்கையை ஒருவருடத்திற்கு முன்னதாக ஆரம்பித்திருந்தால் இந்த நிலைவரத்தை தற்போதைய கடும் நெருக்கடிகளின்றி உரியவாறு கையாண்டிருக்கமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியைத் தொடர்ந்து வகிப்பதற்கான விருப்பத்தைத் தான் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், 'நான் மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது 2 மாதங்கள் மாத்திரமே பதவி வகிப்பேன் என்று கருதவேண்டியிருந்திருந்தால் நான் இந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கமாட்டேன். 

இது இருமாதகாலத்திற்குள் தீர்வுகாணக்கூடிய நெருக்கடியல்ல. இந்த நெருக்கடி சீராகுவதற்கு முன்னதாக மேலும் மோசமடையும்' என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27