வத்தளையில் ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற தாய் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு (15) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பெண் தனது மகனை ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் தானும் குதிக்க முற்பட்டபோது, அந்தப் பகுதியால் சென்ற நபர் ஒருவர் அவரை தடுத்து பாதுகாத்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண் முதலில் ஹெந்தல பொலிஸ் நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அறிந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், ஹெந்தல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணைத் தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
களனி கங்கையில் குறித்த தாயால் தள்ளிவிட்டு காணாமல்போன சிறுவனை கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM