5 வயது மகனை களனி கங்கையில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் கைது : வத்தளையில் சம்பவம்

16 Jun, 2022 | 08:36 AM
image

வத்தளையில் ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற தாய் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு (15) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பெண் தனது மகனை ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் தானும்  குதிக்க முற்பட்டபோது, அந்தப் பகுதியால் சென்ற நபர் ஒருவர் அவரை தடுத்து பாதுகாத்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண் முதலில் ஹெந்தல பொலிஸ் நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், ஹெந்தல பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணைத் தாக்க முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

களனி கங்கையில் குறித்த தாயால் தள்ளிவிட்டு காணாமல்போன சிறுவனை கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01