(எம்.மனோசித்ரா)
ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ள ரஷ்ய தூதுவர் , தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மடெரி ஆகியோருக்கிடையில் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவ்வாறு இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான இரு தரப்பு தொடர்புகளை மேலும் விரிவாக்குவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட கால நட்புறவின் அடிப்படையில் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்.
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் , தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் என்று தூதுவர் உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM