எம்மில் பலருக்கும் தற்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறோம். இதனை சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் பார்வையிழப்பு, காலிழப்பு, இதய பாதிப்பு, ஆண்மை குறைபாடு என எண்ணற்ற உடலியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதிலும் சர்க்கரையின் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் கண்ணின் உள்விழித்திரையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கி பார்வையிழப்பைத் தோற்றவித்துவிடும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிசிக்சை பெறவேண்டும் இதற்காக தற்போது கிரீன் லேசர் என்ற சிகிச்சை முறை பலனை அளித்து வருகிறது.
அதிலும் ஐந்தாண்டுகளாகவோ அல்லது பத்தாண்டுகளாகவோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால் அவருக்கு விழித்திரையில் இரத்த கசிவுகள் துளி துளியாக தெரியத் தொடங்கும். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ அல்லது இதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலோ விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் தோன்றி விழித்திரையின் பணியை முற்றிலும் பாதித்து பார்வையிழப்பை ஏற்படுத்திவிடக்கூடும். ஒரு சிலருக்கு கண்களில் இருந்து இரத்தம் கசியத் தொடங்கிவிடக்கூடும்.
இந்நிலையில் இவர்களுக்கு கிரீன் லேசர் சிகிச்சை மூலமாக இரத்த கசிவுகள் இருக்கும் பகுதிகள் மூடப்படுகிறது. மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்படுகிறது. அதன் பிறகு துளி துளியாக இருக்கும் பகுதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அது குணமாக்கப்படுகிறது. இதன் மூலமாக பார்வையிழப்பை தடுக்க முடியும்.
டொக்டர் கலீல் அஹமது M.S.,
தொகுப்பு அனுஷா
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM