(நா.தனுஜா)
அமெரிக்க விவசாயத்திணைக்களத்தின் முன்னேற்றத்திற்கான உணவு முயற்சியில் பங்குபெறும் இலங்கை பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக்கொண்டு 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.
இச்செய்திட்டம் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதனூடாகப் பால் உற்பத்தி சராசரியாக 68 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டதன் மூலம் சுமார் 25,000 பால் பண்ணையாளர்கள் பயனடைந்திருக்கின்றார்கள்.
அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் முயற்சிக்கான அமெரிக்க ஒத்துழைப்பின் ஓரங்கமான இச்செயற்திட்டம் மூலம் சுமார் 80,000 இலங்கையர்கள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தாமதப்படுத்தப்பட்டுவந்த இவ்வொப்பந்தம் நேற்று அமெரிக்கத்தூதரகத்திற்கும் இலங்கை விவசாயத்திணைக்களத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
'இந்த 27 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல், இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்தியை உறுதிசெய்வதில் அமெரிக்கா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பான கடப்பாட்டிற்கு ஓர் உதாரணமேயாகும்.
இச்செயற்திட்டம் பால் உற்பத்தித்துறையை மேம்படுத்துவதுடன் மாத்திரமன்றி, இத்துறையில் வளர்ச்சியடைவதற்கு அவசியமான வளங்கள் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும்' என்று இப்புரிந்துணர்வு ஒப்பந்தக் கைச்சாத்திடல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM