குமார் சுகுணா
ஸ்ட்ராபெரி நிலவு என வர்ணிக்கப்படும் சூப்பர் மூன் நிகழ்வு 14 ஆம் திகதி வானில் தோண்றவுள்ளது. ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வின்போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
இந்த ஆண்டில் வானில் பல அறிய நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. ஒரே நேர் கோட்டில் பல கிரகங்கள் வானில் தெரியும் அறிய நிகழ்வு கூட இந்த மாதம் நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் நிகழ்வு வானில் தோன்ற உள்ளது.
நிலவின் சுற்றுப்பாதையில் பூமி விலகி நிற்கும்போது இந்த அரிய நிகழ்வு நடப்பதாக கூறும், நாசா விஞ்ஞானிகள், இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெரியாது என்றும், எனினும் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும். இதுவே “சூப்பர் மூன்”. தற்போதும் இதே நிகழ்வு தான் நிகழவுள்ளது. ஆனால் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது அந்த சூப்பர்மூன் “இளஞ்சிவப்பு” நிறத்தில் ஒளிரும். இதைத்தான் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்று அழைக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வு 14 ஆம் திகதி வானில் தெரியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM