பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் உள்ள சிறைகளில் இருந்து 173 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தார்.
இதன்படி, தண்டனை இரத்து ஊடாக 141 கைதிகளையும், 14 நாட்கள் தண்டனை காலம் குறைப்பின் ஊடாக 32 கைதிகளையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் சிறைவாசம் அனுபவித்து வந்த 4 கைதிகள் இன்று (14) திகதி காலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர அவர்களின் வழிகாட்டலில் பிரதான ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இதில் நால்வரும் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM