வட பிராந்தியத்தில் கடமையாற்றும் அனைத்து தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் 21 நாட்களுக்குள் கடமையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அல்லது வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலக்கெடுக்குள் தமது நிபந்தனையை ஏற்று விலகாத அல்லது இடமாற்றம் பெறாத தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் பிரபாகரன் படை எனும் அமைப்பு அனாமதேய அறிவித்தல் ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் விபத்தில் கொல்லப்பட்ட இரு யாழ். பல்கலை மாணவர்கள் தொடர்பில் நியாயம் கிடைக்கும் வரை இவ்வாறு பணியிலிருந்து விலகியிருக்க தமிழ் பொலிஸார் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி வடமாகாணத்தின் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் அனைத்திலும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொதுவாக விடப்ப்ட்டுள்ளது.
இந்த 21 நாள் காலக்கெடு நேற்றிலிருந்து ஆரம்பமாவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ள அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள மேற்படி கடிதம் தொடர்பில் விரிவான விசாரணை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமாரவின் நேரடி கட்டுப்படடில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM