புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டுப்பகுதியில் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் காட்டு யானையொன்று மீட்கப்பட்டுள்ளது.
விலங்குகளுக்கு வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டு யானையைக் காப்பாற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கடந்த 13 நாட்களாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் காயங்களுக்குள்ளான காட்டு யானைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் பிரதேச வாசிகள் உணவுகளை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
காயங்களுக்குள்ளாகி 13 நாட்கள் கடந்தும் இதுவரை 2 தடவைகள் மாத்திரமே குறித்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறைக் காரணமாக மிருக வைத்தியர்கள் வருகைத் தருவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டு யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தால் குணமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வண்ணாத்து வில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM