(இராஜதுரை ஹஷான்)
ஆளும் தரப்பு அரசியல்வாதிகளை இலக்காகக் கொண்டு மே 09 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் பின்னணியில் ஒரு சில பௌத்த குருமார்கள் உள்ளார்கள் என குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.
எனது கருத்திற்கு கண்டனம் வெளியிடுவதை விடுத்து முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் தீக்கிரையான தனது வீட்டை 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்லும் போது மக்கள் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பௌத்த மதகுருமார்கள் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.இவ்வாறான கருத்து அரசியல்வாதிகளுக்கு எதிராக விடுக்கும் அச்சுறுத்தலாகவே கருதப்படும்.
மே மாதம் 09ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளை இலக்காகக் கொண்டு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.
தெரிவு செய்யப்பட்ட வகையில் அரசியல்வாதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.இந்த சம்பவத்தின் பின்னணியில் பௌத்த மதகுருமார்கள் உள்ளார்கள் என்பதை பாராளுமன்றில் குறிப்பிட்டேன்.
பாராளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தி கருத்துரைப்பதாக தற்போது ஒருசில பௌத்த மத தலைவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.தற்போதும் குறிப்பிடுகிறேன்.
மே 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒருசில பௌத்த குருமார்கள் உள்ளார்கள் என்பது தொடர்பில் உரிய தரப்பிற்கு சாட்சியமளித்துள்ளேன்.
பாராளுமன்றில் நான் ஆற்றிய உரைக்கு ஒருசில மத தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடுகின்றனர். அதிருப்தி வெளியிட வேண்டிய அவசியமில்லை முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யட்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM