(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்த பரந்துப்பட்ட கூட்டணி இவ்வாரம் ஸ்தாபிக்கப்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடி பற்றி குறிப்பிடுகிறாரே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இனியொருபோதும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை.
பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் மக்கள் பெரும்பான்மை பலமிக்க அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள்.
அரசாங்கம் தனது தவறை திருத்திக்கொள்ளாமல் தன்னிச்சையான முறையில் செயற்பட்ட காரணத்தினால் அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.
எம்முடன் ஒன்றிணைந்துள்ள 10 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் தலைமைத்துவ பதவிக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் பெயர் பந்துரைக்கப்பட்டுள்ளது. பரந்துப்பட்ட கூட்டணியை இவ்வார காலத்திற்குள் ஸ்தாபிக்கப்படும்.
பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட கதியே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இனி ஏற்படும். நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களின் நிர்வாகத்தை முழுமையாக எதிர்க்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்பதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாதகமான எவ்வித தீர்மானங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM