ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று 31 ஆம் திகதி திங்கட்கிழமை கூடுகின்றது. சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இரவு 7.00 மணிக்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடுகின்றது.
இக் கூட்டத்தின் போது சுதந்திரக் கட்சியிலிருந்து விடுபட்டு தனித்து இயங்கும் குழுவினர், அத்தோடு சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளவர்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுமென்றும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
அதேவேளை, கட்சியின் எதிர்காலம், அமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசப்பட்டு முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருவதோடு ஐ.தே. கட்சியுடன் இணக்கப்பாட்டு ஆட்சி அதாவது தேசிய அரசின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை இன்றைய சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தொடர்பாக அதன் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கையில்;
இது ஜனாதிபதி தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வழமை யாக இடம்பெறும் மத்தியகுழுக் கூட்டம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM