(என்.வீ.ஏ.)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முல்டான் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 120 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.
முதலாவது போட்டியில் 5 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி இருந்த பாகிஸ்தான் இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்தேச ஒருநாள் தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இமாம் உல் ஹக், அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகியோர் குவித்த நிதானம் மிக்க அரைச் சதங்கள், மொஹமத் நவாஸின் துல்லியமான பந்துவீச்சு என்பன பாகிஸ்தானின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.
மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது பக்கார் ஸமான் (17) ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
அவர்கள் இருவரும் 42 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இமாம் உல் ஹக் 72 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஷதாப் கான், குஷ்தில் ஷா ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அக்கீல் ஹொசெய்ன் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அண்டர்சன் பிலிப் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
கய்ல் மேயர்ஸ் (33), ஷமார் புறூக்ஸ் (42), நிக்கலஸ் பூரன் (25) ஆகிய மூவரே 25 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் மொஹமத் நவாஸ் 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் மொஹமத் வசிம் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM