லண்டன் மலையக இலக்கிய மாநாடு இன்று (11) நடைபெறுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வாக கலைஞர் மாத்தளை கார்த்திகேசு, கவிஞர் பொன் பூபாலன் ஆகிய இருவருக்கும் அரங்கத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மாத்தளையில் பிறந்து, 1960 தொடக்கம் நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நூல் வெளியீடுகள் என மலையக இலக்கியத்தில் ஆழமான தடம்பதித்தவர், மாத்தளை கார்த்திகேசு.
மாத்தளை பலாபத்பல நோனா தோட்டத்தில் பிறந்தவர், கவிஞர் பொன் பூபாலன்.
இவர் ஆசிரியராக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக பணியாற்றி, மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் கலை இலக்கியத்துறைக்கும் 1960ஆம் ஆண்டு முதல் பெரும் பணியாற்றி வந்தவர்.
'இதயமுள்ள பாரதி', 'கவிதை அரங்கேறும் கோலம்' ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டவர். மலையக கவிதை இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்.
இவ்விரு மலையக இலக்கியவாதிகளுக்கும் லண்டன் மலையக இலக்கிய மாநாட்டில் இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அத்துடன் மாத்தளை அறங்காவலர்களான விக்னேஸ்வரா சர்வானந்தா, சண்முகம் சந்திரசேகரன் ஆகியோரும் இம்மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM