(எம்.மனோசித்ரா)
பல்கலைக்கழக மாணவர்களால் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ருஹூணு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் , சில மாணவர்களின் உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுக்குமாறும் கோரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் பலவந்தமாக கல்வி அமைச்சிற்குள் நுழைய முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டாக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை தாண்டி இசுருபாயவிற்குள் செல்ல முயற்சித்தனர்.
ஆர்ப்பாட்டாக்காரர்கள் பல தடவைகள் இசுருபாயவிற்குள் நுழைய முயற்சித்த போதிலும் அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை.
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தந்த நிலையில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் மீண்டும் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டாக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்காக சென்றனர்.
இரண்டு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தையின் நிறைவில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM