பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை - அதிகாரியுடனான பேச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர்

Published By: Digital Desk 4

10 Jun, 2022 | 09:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பல்கலைக்கழக மாணவர்களால் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்றைய  தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ருஹூணு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் , சில மாணவர்களின் உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுக்குமாறும் கோரி இன்று  வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் பலவந்தமாக கல்வி அமைச்சிற்குள் நுழைய  முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டாக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை தாண்டி இசுருபாயவிற்குள் செல்ல முயற்சித்தனர்.

ஆர்ப்பாட்டாக்காரர்கள் பல தடவைகள் இசுருபாயவிற்குள் நுழைய முயற்சித்த போதிலும் அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருகை தந்த நிலையில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் மீண்டும் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டாக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்காக சென்றனர்.

இரண்டு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேச்சுவார்த்தையின் நிறைவில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11