வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொதுநலவாய சபை செயலாளரிடம்  பிரதமர்  கோரிக்கை 

Published By: Vishnu

10 Jun, 2022 | 09:46 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொதுநலவாய சபையின் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்திருக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் பராாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மிகவும் மிலேச்சத்தனமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் கொலை, அவரது குடும்பத்துக்கு மாத்திரமல்ல, பாராளுமன்றத்துக்கும் விழுந்த அடியாகும். அவரையும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியையும் ஏன் இவ்வாறு கொலை செய்தார்கள் என்ற விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கவுக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ஷ்வை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என ஆரம்பத்தில் இருந்து குரல் எழுப்பி வந்தவர்.

அப்படியாயின் ஏன் அவரை தாக்கவேண்டும். அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தற்போது இனம் காணப்பட்டு வருகின்றனர்.

அன்றைய தினம் பல வீடுகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன.. வெளி பிதேசத்தில் இருந்து வந்தவர்களே இதனை செய்திருக்கின்றனர் என்பது அந்த பிரதேச மக்கள் பலரும் எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.

எனவேஇதுதொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இலங்கையில் விசாரணை நடத்துவதில் பிரச்சினை இருப்பதாக இருந்தால், விசேடமாக,  காலி முகத்திடல் சம்பவம் உட்பட அனைத்தையும் விசாரணை செய்யுமாறு கோரி பொது நலவாய சபையின் பாராளுமன்ற சபையின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பிக்குக்கு எழுத்துமூலம் தெரிவித்திருக்கின்றேன். அதனால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் சபாநாயகரும் அவருடன் பேச வேண்டும் என கேட்டுக்கொள்கினறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55