(எம்.மனோசித்ரா)
இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகளுக்காக சிங்கப்பூரின் உதவி கோரப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த உதவியைக் கோரியுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அந்நாட்டுக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்தோடு இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் அமைச்சர் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவி கோரினார். இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் கோரினார்.
இதே போன்று சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்த அமைச்சர் , இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக விளக்கமளித்ததோடு , இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து சிங்கப்பூரின் உதவியைக் கோரினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM