இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, மகளிர், சிறுவர் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சு என இரண்டு அமைச்சுக்களை பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சு வசம் காணப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சு வசம் காணப்பட்ட குடிவரவு, குடியகல்வு விவகாரம், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், தகவல் தொழில்நுட்ப வசதிகள் விநியோகம், சைபர் பாதுகாப்பு, தனிநபர் பதிவு செய்தல், முதலீட்டு ஊக்குவிப்ப, பொருளாதார அபிவிருத்தி வலயங்களை ஊக்குவித்தல் ஆகியன நீக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சு வசமிருந்து நீக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு வசம் கையளிக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட
https://cdn.virakesari.lk/uploads/medium/file/180449/2283-34_E.pdf
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM