(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)
2019ஆம் ஆண்டின் இறுதி காலப்பகுதியில் அரசாங்கம் வரி கொள்கையினை மாற்றியமைத்ததால் சுமார் 500 பில்லியன் வரையான அரச வருவாயை அரசாங்கம் இழந்தது என குறிப்பிடுவது நியாயமற்றது.
வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டமை, கொவிட் தாக்கம் உள்ளிட்ட பொது காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. என நிதியமைச்சின் முன்னாள் செயலாளர். எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2019.12.04 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பித்த யோசனைக்கமையவே வரி கொள்கை மாற்றியமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர,நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆட்டிகல , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,நாணய சபையின் உறுப்பினர்கள்,மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆகியோர் 08 ஆம் திகதி புதன் கிழமை நேற்று அரச நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகினர்.
அ மைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கையில் அதன் விடயதானங்களை வகுத்த அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும்.இருப்பினும் இவ்வாறான தன்மையை காணமுடியவில்லை.மத்திய வங்கியின் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
கொவிட் பெருந்தொற்று தாக்கம் செலுத்துவதற்கு முன்னர் அரசியல் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ரீதியிலான தீர்மானங்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல் நிலைமை குறித்து நாணய சபை அறிக்கை சமர்ப்பித்ததா என அரச நிதி தொடர்பிலான தெரிவு குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அவ்வாறான தீர்மானம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டு அது தெரிவு குழுவிற்கும் சமர்ப்பிக்கப்பட்டது என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர இதன்போது பதிலளித்தார்.
பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன்னெடுத்த கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் தவறானதாக அமையும் பட்சத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் உயர் அதிகாரிகளுக்கு அவற்றை அறிவிக்க நடவடிக்கையினை முன்னெடுத்தனரா என குழுவினர் கேள்வி எழுப்பினர்.
.இதன்போது கருத்துரைத்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்நலால் வீரசிங்க அரசில் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் அரசியல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இடையிலான வேறுபாடு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டு வருடகாலத்தில் பொருளாதாரத்தை ஒழுங்கான முறையில் முன்னெடுத்து செல்லாமல்,பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாகியதை தாங்கள் அறியவில்லை என்றும் அது அரசியல் தீர்மானம் எனவும் அரச அதிகாரிகள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM