(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் தொடர்ந்து அதிக செலவு செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு மின்சார சட்டத்தில் உள்ள தடையை நீக்கிக்கொள்ள சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் வலியுறுத்தினார்
பாராளுமன்றில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை மின்சார சட்டம் திருத்தச் சட்ட மூலத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் ;
2009 .இலக்கம் 20 என்ற மின்சார சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துள்ளேன். இச்சட்டமூல திருத்தத்தை தொடர்ந்து 2013.08.08ஆம் திகதி முதல் காணப்பட்ட தடையினை நீக்கிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.மின்சார சட்டத்தின் 43ஆவது அத்தியாயத்தில் அ மற்றும் ஆ என்ற பகுதியில் அல்லது என்ற சொற்பதம் 2013.31ஆம் இலக்க சட்டத்தில் நீக்கப்பட்டதால் தடைகள் தோற்றம் பெற்றுள்ளன.
மின்விநியோக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ள போது இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்கட்டமைப்பின் நெருக்கடிக்கு ஏன் தீர்வு காண முடியாது என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.பாரிய நிதியை செலவழித்து நிலக்கரியை கொள்வனவு செய்து மின்னுற்பத்தி செய்வது தொடர்பில் பல்வேறு கேள்வி எழுந்துள்ளன.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தபய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை தமது செயற்திட்ட கொள்கையாக குறிப்பிட்டுள்ளனர்.மின்வலுத்துறை சட்டத்தில் உள்ள தடையினை நீக்கிக்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலும், தொழிற்சங்கங்களுக்கிடையில் கருத்தொற்றுமை இல்லாத காரணத்தினால் நாடு பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது.
மின்னுற்பத்திக்காக வருடாந்தம் 756 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.இருப்பினும் மின்னுற்பத்தியினால் கிடைக்கப்பெறும் வருமானம் 250 பில்லியனாக காணப்படுவதால் மின்சார சபை மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்துகிறது.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நுரைச்சோலை அனல் மின்நிலையம் உருவாக்கம் தொடர்பில் யோசனையை முன்வைக்கும் போது பெரும்பாலானோர் கடுமையாக எதிர்த்தார்கள்.எதிர்ப்பிற்கமைய நுரைச்சோலை மின்நிலையத்தை உருவாக்காமலிருந்தால் தற்போது நாளாந்தம் சுமார் 6 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த நேரிட்டிருக்கும்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் தொடர்ந்து எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரத்தை தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாது.புதுப்பிக்கத்த சக்தி வளங்கள்,சூரிய சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகம் வாய்ப்பு உள்ள போதும் ஒரு சில சட்ட சிக்கல்களினால் குறித்த செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளது.
பொது கொள்கையினை கருத்திற்கொண்டு சகல தரப்பினரும் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இச்சட்ட திருத்தத்ததை தொடர்ந்து மின்னுற்பத்தி செலவை குறைத்து அதன் சலுகையை நாட்டு மக்களுக்கு வழங்க அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM