இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படதயார்என சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் பெரும் முயற்சிகளை பாராட்டியுள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இந்தியா சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியாவின் பெரும் முயற்சிகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,நாங்கள் அதனை அங்கீகரித்துள்ளோம்,நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை உட்பட ஏனைய நாடுகள் அந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா இந்த வருடம் வழங்கியுள்ள 3.5 பில்லியன் டொலர் உதவியை சீனா ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்,இலங்iயில் இரண்டு வல்லரசுகளும் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையின் வடபகுதி யாழ்குடாநாட்டில் சீனா முன்னெடுக்கவிருந்த புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை இலங்கை இந்தியாவிற்கு வழங்கியமை குறித்து சீனா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் கேள்விப்பத்திர முறை மூலம் பெறப்பட்ட திட்டமொன்றை இடைநிறுத்துவது இலங்கை குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கு சிறந்த செய்தியை வழங்காது என கொழும்பிற்கான சீனா தூதுவர் தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM