அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டால் அவருடன் நான் இருக்கமாட்டேன் பிரதமர் ரணில் 

Published By: Vishnu

08 Jun, 2022 | 09:58 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டால் அவருடன் இந்த இடத்தில் என்னால் இருக்க முடியாது . நான் இருக்கப்போவதும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 08 ஆம் திகதி புதன்கிழதை இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் குறுக்கீட்டு கேள்வியொன்றை முன்வைத்து பிரதமரிடம் கேட்ட போது, நீங்கள் மிஸ்டர் கிலீன் என அறிமுகப்படுத்தப்படுபவர்.

அப்படி இருக்கும்போது நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு அசுத்தப்படடுத்தப்பட்டிருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் அமரமுடியுமா. ஏனெனில் மிஸ்டர்  கிலீனும் ,மிஸ்டர்  டேட் டியும்  ஒன்றாக இருக்க முடியாது என்றார்.

அதற்கு பிரதமர் பதிலளிக்கையில்,

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கின்றது. அந்த தீர்ப்புக்கு எதிராக முறையிட அவருக்கு இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

மேன் முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தால், அவருடன் என்னால் இந்த இடத்தில் அமர முடியாது, நான் இவருடன் இருக்கப்போவதும் இல்லை .

அத்துடன் அவருக்கும் இந்த இடத்தில் அமர முடியாது. அதுவரைக்கும் அமர்ந்திருப்பேன். அதற்கு நான் பழக்கப்பட்டிருக்கின்றேன்.

ஏனெனில் உங்களில் பலருக்கும் வழக்கு தொடுத்து, உயர் நீதிமன்றம் செல்லும் வரைக்கும் நாங்கள் உங்களுடன் இருந்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13