முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021 ஜூலை 8 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த நிலையில், பின்னர் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியையடுத்து நிதியமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷ விலகியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது தீர்மானத்தை தெளிவுபடுத்தும் வகையில் நாளையதினம் பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளதாக பொரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM