பெருந்தோட்டங்களில் பயன்படுத்தப்படாத காணிகள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் : மனோவின் வேண்டுகோளுக்கு பிரதமர் உறுதி 

Published By: Digital Desk 5

07 Jun, 2022 | 04:49 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  சபையில் தெரிவித்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள கஷ்டங்கள் தொடர்பில் நான்  பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தேன். 

அதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது  பெரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.நாளொன்றுக்கு அவர்கள் ஒரு நேர உணவையே உண்கின்றனர். 

இத்தகைய நிலையை கருத்திற் கொண்டு  பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை பயிர் செய்கைகளுக்காக அவர்களுக்கு வழங்குமாறு  கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் தமக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் அதன் பிரதிபலன்களை வழங்குவார்கள் என்றார்.

அதற்கு பிரதமர் பதிலளிக்கையில்,

பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு தோட்டங்களில் காணப்படும் பயன்படுத்தப்படாத  காணிகளை விவசாயத்துக்காக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடித மூலம் மனோ கணேசன் எம்பி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அந்த விடயம் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.  விவசாய அமைச்சரும் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், விவசாய அமைச்சர் ஆகியோர் மலையக பகுதிகளில் உள்ள  எம்.பிக்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் குறிப்பிட்டிருந்தேன்.

நாங்கள் அதனை மனோ கணேசனின் திட்டம் என்றே கூறலாம் என்றும் இதன்போது பிரதமர் நகைச்சுவையாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,

மனோ கணேசனின் யோசனை தொடர்பில் பிரதமருடன் நடத்தப்பட்ட  கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

அதன்போது அமைச்சர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.  தோட்ட மக்களுக்கு அந்த காணிகளை பகிர்ந்தளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58