(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
தனியார் பஸ்கள், சுற்றுலாத்துறை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு இன்று முதல் அரச டிபோக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமை போல் இடம்பெறும் எனவும் வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இம்மாதத்திற்கான தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என தற்போதைய நிலைக்கமைய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவுக்கு மாத்திரம் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 750 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப்பெற்றது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவுக்காக மேலதிகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
எரிபொருள் கொள்வனவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது.கடந்த இரு மாத காலப்பகுதியில் அதிக அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளாந்தம் 5,400 மெற்றிக்தொன் டீசலும், 3400 மெற்றிக்தொன் பெற்றோலும் நாளாந்தம் விநியொகிக்கப்பட்டுள்ளது.மின்சாரம்,போக்குவரத்து,வைத்தியசாலை,தனியார் பேருந்து சேவை மற்றும் துறைமுகம் உட்பட பொருளாதார
கேந்திர மத்திய நிலையங்களுக்கு எரிபொருளை தடையின்றி விநியோகிக்க வேண்டும் என்பதால் டீசல் விநியோகம் 3,200 மெற்றிக் தொன்னாகவும்,பெற்றோல் விநியோகம் 2,400 மெற்றிக்தொன் னாகவும் மட்டுப்படுத்தப்பட்டது.
எரிபொருள் கிடைப்பதில் சாதகமான தன்மை காணப்படுவதால் இன்றைய தினம் 5,000 மெற்றிக்தொன் டீசலும், 3,000 மெற்றிக்தொன் பெற்றோலும் நாடு தழுவிய ரீதியில் விநியோகிக்கப்படும்.
எதிர்வரும் இரு நாட்களில் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ளன. எரிபொருள் கொள்வனவிற்கான நிதியை விநியோகிக்க மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமானால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் எரிபொருள் விநியோகத்தில் சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை வழங்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
அதற்கமைய தனியார் பேரூந்து சேவை,பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் சுற்றுலாத்துறை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கல் ஊடாக இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
அத்துடன் நாடு தழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 160 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கொள்வனவு மற்றும் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இதுவரையில் 90 யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு நீண்டகால கொள்கை திட்டம் செயற்படுத்தப்படும் என்றார்.
மின்சாரத்துறை
எரிபொருள் பற்றாக்குறை மின்சாரத்துறைக்கும் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாளாந்த மின்விநியோக தடை தற்போது கட்டம் கட்டமாக மட்டுப்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் இரண்டரை மணித்தியாலங்களாக அமுல்படுத்தப்படும்.மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்து செல்கிறது. நாளாந்த மின்விநியோக தடையினால் டீசலுக்கு செலவாகும் 400 மில்லியன் டொலர் சேமிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளத.ஒரு மின் அலகிற்கு 47 ரூபா செலவாகும் நிலையில் மின் அலகிற்கு அறவிடும் தொகை குறைந்த பட்சமாக காணப்படுகிறது.
ஆகவே எதிர்காலங்களில் மின்கட்டணம் வேறுபடுத்தப்பட்ட நிலையில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM