(எம்.மனோசித்ரா)
கனடா உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்துடன் தன்னார்வ ஒத்துழைப்பு வேலைத்திட்டம் 2020 - 2027 தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கனடா உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனம், உலகளாவிய ரீதியில் குறைந்த சிறப்புரிமைகளைக் கொண்டுள்ள இளம் யுவதிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி, தொழில் மற்றும் வலுவூட்டல்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் தன்னார்வ ஒத்துழைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
குறித்த வேலைத்திட்டங்கள் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இருதரப்பினர்களுக்கிடையில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 சூழலில் ஏற்பட்ட பயணத்தடைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த வேலைத்திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாததுடன், அவ்வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் 10 இன் கீழ் 2.76 மில்லியன் கனடா டொலர்களை வழங்கி குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM