இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினராக விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் பண்டாரவை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தீர்மானித்துள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் இடையிலான உறவுகளை ஏற்படுத்த எண்ணியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘‘முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபைக்குப் பதிலாக புதியதொரு இடைக்கால சபையை என்னால் நியமித்திருக்க முடியும்.
எனினும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவுக்கான தேர்தல் நெருங்குவதால் பல பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருந்ததால் இந்த எண்ணத்தைக் கைவிட்டேன். மேலும் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டபோது விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாமை பெருங்குறையாகவே நான் கருதுகின்றேன்.
இதன் காரணமாக கிரிக்கெட் இடைக்கால சபைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் இடையில் எவ்வித உறவுகளும் இல்லாமல் போனது டன் பிரச்சினைகளே வலுக்கத் தொடங்கின’’ என அமைச்சர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM