அட்டன் கிளை
மண்ணெண்ணெய் விநியோகத்தில் தமது பிரதேசத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி அட்டன் பிரதேச வாழ் மக்கள் இன்று (07) காலை அட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக வீதியில் அமர்ந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அட்டன் தலவாக்கலை மார்க்கம் மற்றும் அட்டன் பொகவந்தலாவை மார்க்கங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
கடந்த ஐந்து நாட்களுக்கு மேல் தமக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லையென வரிசையில் நீண்ட நேரம் நின்ற மக்கள் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரே அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக பிரதான மார்க்கத்தில் தரையில் அமர்ந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தடை ஏற்பட்டதால் அவ்விடத்துக்கு வருகை தந்த அட்டன் பொலிஸார் மக்களிடம் பேச்சு நடத்தி மண்ணெண்ணெய் எப்போது வரும் என்று தமக்குள் உறுதியாக கூற முடியாது என்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிக்க வேண்டாம் என்றும் கூறினர்.
இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் எப்போது மண்ணெண்ணெய் வரும் என்று தமக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் இதனால் மக்களுடன் வீணாக முரண்பாடு உருவாகி வருகின்றது என்றும் தெரிவித்தார்.
கடந்த ஐந்த நாட்களுக்கு முன்பு குறித்த எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்கு அதிகாலை 4 மணியிலிருந்து காத்திருந்த மக்களில் ஒரு சாராருக்கு மாத்திரமே மண்ணெண்ணெய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டன் நகரில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தும் ஒரு இடத்தில் மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றமை முக்கிய விடயம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM